சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,
பண் - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=asmBSSc4kPU
4.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெடிய மால் பிரமனோடு நீர்
பண் - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=In8Ve0q0FGA

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.049   ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்;
ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.

[1]
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து
ஆற்று நீர் பூரித்து ஆட்டும், அந்தணனாரைக் கொல்வான்
சாற்றும் நாள் அற்றது என்று, தருமராசற்கு ஆய், வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

[2]
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி,
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெருங் கொடு மழுவால் வீச,
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[3]
சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே, கோச் செங்கணானும் ஆக,
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார்-குறுக்கை வீரட்டனாரே.

[4]
ஏறு உடன் ஏழ் அடர்த்தான், எண்ணி ஆயிரம் பூக் கொண்டு(வ்)
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்;
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை மிண்ட;
கூறும் ஓர் ஆழி ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[5]
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கிய(ன்)னார்
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக்
கொல்லி ஆம் பண் உகந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[6]
காப்பது ஓர் வில்லும் அம்பும், கையது ஓர் இறைச்சிப்பாரம்,
தோல் பெருஞ் செருப்புத் தொட்டு, தூய வாய்க் கலசம் ஆட்டி,
தீப் பெருங் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண்
கோப்பதும், பற்றிக் கொண்டார்-குறுக்கை வீரட்டனாரே.

[7]
நிறை மறைக் காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட,
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அறக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

[8]
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி;
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து; நல் அருந்தவத்த
கணம் புல்லர்க்கு அருள்கள் செய்து, காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

[9]
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து,
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட,
கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.050   நெடிய மால் பிரமனோடு நீர்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[1]
ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம், எம்பெருமான்! என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல,
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[2]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list